» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்.” என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் குரல் பதிவாகியுள்ளது. கரூர் துயரச் சம்பவம் நடந்தபோதும் கூட விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏதும் கசியவில்லை. இந்தநிலையில் இன்று இந்தப் பதிவை ராகுல் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் குரல் பதிவாகியுள்ளது. கரூர் துயரச் சம்பவம் நடந்தபோதும் கூட விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏதும் கசியவில்லை. இந்தநிலையில் இன்று இந்தப் பதிவை ராகுல் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: முதல்வருக்கு அஸ்வினி வைஷ்ணவ்பதில்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:07:41 PM (IST)

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:25:11 AM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி பறிப்பு : பெண் டிஎஸ்பி சஸ்பெண்ட்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:33:44 PM (IST)


ராகுல் குரல்Jan 14, 2026 - 03:47:32 PM | Posted IP 162.1*****