» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புத்த பூர்ணிமா: நேபாளம் லும்பினி மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

திங்கள் 16, மே 2022 5:44:02 PM (IST)



புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயா தேவி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனிதத் தலமான மாயாதேவி கோயிலுக்கு நேபாள நாட்டுப் பிரதமர் ஷேர் பகதூர் தேயூபாவுடன் பிரதமர் மோடி வழிபாடு செய்தார் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. புத்தரின் பிறந்த இடத்தில், மார்க்கர் கல்லில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் பௌத்த முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. 

மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், லும்பினியில் அன்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். புத்த பூர்ணிமாவின் இந்த நாளில் நேபாளத்தின் அற்புதமான மக்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. லும்பினியில் நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நேபாளத்துக்குச் செல்வது இது ஐந்தாவது முறையாகும். மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory