» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெரியவர்களே வீட்டில் இருக்கும்போது, குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டுமா? உச்சநீதிமன்றம் கேள்வி

வியாழன் 2, டிசம்பர் 2021 4:24:52 PM (IST)

பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதா? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்தது. பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப் பட்டுள்ளபோது குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம்  சரமாரி கேள்வி எழுப்பியது. 

மேலும், காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த வாரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல் திட்டத்தை 24 மணி நேரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்  வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory