» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:03:26 PM (IST)
தெலங்கானாவில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா என்கவுண்டரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளிவருவதால் உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.. அதைத் தொடர்ந்து இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா சொந்துர் பால்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ தலைவர் டி.ஆர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணை கமிஷனை நீதிபதிகள் நியமித்தனர்.
இந்த விசாரணை கமிஷன், தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை துவங்கிய 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை கமிட்டிக்கு மத்திய ரிசர்வ் காவல் படை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதித்தனர். அடுத்தக்கட்ட உத்தரவு வரும்வரை இந்த என்கவுண்டர் தொடர்பாக வேறு யாரும் விசாரணை நடத்த கூடாது என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே கொடூரம்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:41:07 PM (IST)

டிஜிட்டல் வாக்காளா் அட்டை பதிவிறக்கம் செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்
திங்கள் 25, ஜனவரி 2021 10:54:44 AM (IST)

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைப்பு: 14பேர் கைது
ஞாயிறு 24, ஜனவரி 2021 8:04:03 PM (IST)

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)
