» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காற்றில் பறந்து வந்த கோரிக்கை மனு: காரை நிறுத்தி பெண்ணுக்கு ஆறுதல் கூறிய நிதி அமைச்சர்!!.
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:49:06 PM (IST)

கர்நாடகாவில் தனது கார் மீது கோரிக்கை மனுவை வீசிய பெண்ணுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறி தீர்வு வழங்கியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, காற்றில் மிதந்து கடிதம் ஒன்று பறந்து வந்து விழுந்துள்ளது. இதனை கவனித்த நிர்மலா, காரை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்த கடிதத்தை அங்கிருந்த பெண் ஒருவர் கார் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் வெள்ளத்தால் வீடின்றி தவிக்கும் தனக்கு வீடு கட்டி தருமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து பேசிய நிர்மலா, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கினார். பின்னர், ‘வீட்டிற்காக நீங்கள் அழ வேண்டிய அவசியம் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உங்களுக்கு வீடு கட்டி தரப்படும். உங்கள் பெயரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படும்’ என உறுதி அளித்து தீர்வு வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 13-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: சுவாதி மாலிவால் மருத்துவமனையில் அனுமதி
ஞாயிறு 15, டிசம்பர் 2019 2:46:59 PM (IST)

ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது
சனி 14, டிசம்பர் 2019 7:21:36 PM (IST)

ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்: அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு
சனி 14, டிசம்பர் 2019 3:38:57 PM (IST)

உண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியது பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தான் : ராகுல் காட்டம்
சனி 14, டிசம்பர் 2019 3:31:42 PM (IST)

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது: மம்தா
சனி 14, டிசம்பர் 2019 10:59:03 AM (IST)

குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு தகவல்
சனி 14, டிசம்பர் 2019 8:30:53 AM (IST)
